• May 04 2024

போதைப்பொருள் பாவனையை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி மூதூரில் பெண்கள் போராட்டம்..!samugammedia

mathuri / Apr 9th 2024, 9:29 pm
image

Advertisement

போதைப்பொருள் பாவனையை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மூதூர் -இறால்குழி கிராமத்தில் இன்று செவ்வாய்கிழமை (09) காலை இடம்பெற்றது.

மூதூர் -இறால்குழி கிராம மாதர் சங்கதினர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு கிராமத்திலுள்ள சங்கங்கள், மூதூர் பிரதேச இந்துகுருமார் சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.


இதன்போது கிராமத்தில் உள்ள உள் வீதிகளில் கோசங்களை எழுப்பி நடைவனியாகச் சென்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கசிப்பு போதை பாவனையால் தமது கிராமம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது





இதில் கலந்து கொண்டோர் தமது கிராமத்தில் அதிகளவு போதை பாவனை காணப்படுவதாகவும், இதனால் பல்வேறு சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தனர். இதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு போதைப் பாவனையை தடுத்து நிறுத்துவதற்கு முன் வரவேண்டும் எனவும் மூதூர் இறால்குழி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




போதைப்பொருள் பாவனையை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி மூதூரில் பெண்கள் போராட்டம்.samugammedia போதைப்பொருள் பாவனையை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மூதூர் -இறால்குழி கிராமத்தில் இன்று செவ்வாய்கிழமை (09) காலை இடம்பெற்றது.மூதூர் -இறால்குழி கிராம மாதர் சங்கதினர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு கிராமத்திலுள்ள சங்கங்கள், மூதூர் பிரதேச இந்துகுருமார் சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.இதன்போது கிராமத்தில் உள்ள உள் வீதிகளில் கோசங்களை எழுப்பி நடைவனியாகச் சென்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கசிப்பு போதை பாவனையால் தமது கிராமம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுஇதில் கலந்து கொண்டோர் தமது கிராமத்தில் அதிகளவு போதை பாவனை காணப்படுவதாகவும், இதனால் பல்வேறு சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தனர். இதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு போதைப் பாவனையை தடுத்து நிறுத்துவதற்கு முன் வரவேண்டும் எனவும் மூதூர் இறால்குழி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement