மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் நேற்று முன்தினம் 2.4கிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவரை மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய நேற்றைய தினமே இவ்வாறு கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதோடு 30 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது-