ஆடை தொழிற்சாலையின் அச்சு இயந்திரத்தில் தலை சிக்கியதில் இளைஞர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
வஸ்கடுவ பொக்குணவத்தை வீதியில் அமைந்துள்ள ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்றில் அச்சு இயந்திரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இயந்திரம் திடீரென இயங்கியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.
இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போது இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.