• May 19 2024

தொலைபேசியால் வந்த வினை - இலங்கையில் இளைஞன் கத்தியால் குத்தி படுகொலை..! samugammedia

Chithra / Oct 10th 2023, 3:49 pm
image

Advertisement

 கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறில் 24 வயதுடைய நபர் ஒருவர் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொட்டாஞ்சேனை ஸ்ரீ குணானந்த மாவத்தையைச் சேர்ந்த யோரம் ஹரியம் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (09) இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட இளைஞர்  தனது தாய், தந்தை மற்றும் சகோதரியுடன் ஸ்ரீ குணானந்த மாவத்தை பகுதியில் வசித்து வந்துள்ளார்.

கொலையுண்ட நபரின் வீட்டிற்கு நண்பர் ஒருவர் வந்து வீட்டினருகே உள்ள மின்மாற்றிக்கு அருகில் நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த போது, ​​மற்றுமொரு நபர் அந்த இடத்திற்கு வந்து கைத்தொலைபேசியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் அப்பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

தொலைபேசியால் வந்த வினை - இலங்கையில் இளைஞன் கத்தியால் குத்தி படுகொலை. samugammedia  கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறில் 24 வயதுடைய நபர் ஒருவர் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கொட்டாஞ்சேனை ஸ்ரீ குணானந்த மாவத்தையைச் சேர்ந்த யோரம் ஹரியம் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று திங்கட்கிழமை (09) இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.கொலை செய்யப்பட்ட இளைஞர்  தனது தாய், தந்தை மற்றும் சகோதரியுடன் ஸ்ரீ குணானந்த மாவத்தை பகுதியில் வசித்து வந்துள்ளார்.கொலையுண்ட நபரின் வீட்டிற்கு நண்பர் ஒருவர் வந்து வீட்டினருகே உள்ள மின்மாற்றிக்கு அருகில் நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த போது, ​​மற்றுமொரு நபர் அந்த இடத்திற்கு வந்து கைத்தொலைபேசியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.கொலை செய்யப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் அப்பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Advertisement

Advertisement

Advertisement