• Jul 27 2024

இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த இளம் தாய் திடீரென உயிரிழப்பு! யாழில் பெரும் சோகம்..! samugammedia

Chithra / Nov 28th 2023, 10:35 am
image

Advertisement

 


யாழ்ப்பாணத்தில் இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த சில நாட்களில் தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இச்சம்பவம் நேற்று  யாழ் போதனா வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது.

தொண்டைமானாறு வல்வை வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய நி.விதுஷா என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

கடந்த வருடம் திருமணம் செய்த குறித்த பெண் பிரசவத்திற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

கடந்த சில தினங்களுக்கு முன் குறித்த பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்ததாக தெரிக்கப்படுகின்றது. 

நல்ல உடல் நலத்துடன் தாயும் இரு குழந்தைகளும் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தாய் தீடிரென உயிரிழந்தமை அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. 


இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த இளம் தாய் திடீரென உயிரிழப்பு யாழில் பெரும் சோகம். samugammedia  யாழ்ப்பாணத்தில் இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த சில நாட்களில் தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று  யாழ் போதனா வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது.தொண்டைமானாறு வல்வை வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய நி.விதுஷா என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த வருடம் திருமணம் செய்த குறித்த பெண் பிரசவத்திற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன் குறித்த பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்ததாக தெரிக்கப்படுகின்றது. நல்ல உடல் நலத்துடன் தாயும் இரு குழந்தைகளும் காணப்பட்டுள்ளனர்.இந்நிலையில், தாய் தீடிரென உயிரிழந்தமை அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement