ஹங்வெல்ல, தித்தெனிய பிரதேசத்தில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருள், வாள், 8 சிம் அட்டைகள் மற்றும் ஒன்பது ATM அட்டைகளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹங்வெல்ல பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்போது கடுவெல நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் கொலை வழக்கு ஒன்றிலும் இவர் தொடர்புடையவர்.
27 வயதான இவர் தெதிகம பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
அவர் இன்று அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிம், ஏடிஎம் அட்டைகள் மற்றும் ஆபத்தான பொருட்களுடன் இளைஞன் கைது samugammedia ஹங்வெல்ல, தித்தெனிய பிரதேசத்தில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருள், வாள், 8 சிம் அட்டைகள் மற்றும் ஒன்பது ATM அட்டைகளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹங்வெல்ல பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.குறித்த நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.தற்போது கடுவெல நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் கொலை வழக்கு ஒன்றிலும் இவர் தொடர்புடையவர்.27 வயதான இவர் தெதிகம பிரதேசத்தை சேர்ந்தவராவார்.அவர் இன்று அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.