மாவனல்லை ஸஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு 'ஸஹிரா நடைபவனி' கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணிக்கு ஆரம்பமாகி மாவனல்லை நகரை வலம் வந்தது.
நாலாபக்கங்களிலும் வந்து கல்விகற்ற கல்லூரித்தாயின் மாணவர்கள் ஒன்று சேர கொண்டாடிய இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக இலங்கையின் அதிநீளமான பாடசாலைக்கொடி என்ற பெருமையை சுமந்த ஸஹிராத்தாயின் 244 மீற்றர் நீளமான பாடசாலைகொடி கல்லூரியின் 83rd batch (2016 A/L) இனால் தயாரிக்கப்பட்டு 150 ஸஹிரா மாணவர்கள் சுமந்து சென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.