கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கையானது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியுட்டுள்ளன.
உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வரும் சூழலில் அவர்களை சில நாடுகள் அங்கீகரித்து அதற்கான சட்டங்களை இயற்றியுள்ளதுடன், சில நாடுகளில் ஓரினச் சேர்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் குறித்த மசோதாவின் பிரகாரம் ஓரின சேர்க்கையாளர் என அடையாளப்படுத்தப்படுவது குற்றம் எனவும் அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான விதி மீறல்களில் ஈடுபடும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு குறித்த சட்டத்தின் மூலம் மரண தண்டனை விதிக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உகாண்டா உட்பட 30 ற்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒரே பாலின உறவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில், உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான புதிய நடவடிக்கையாக சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிப்பது, அதில் ஈடுபடுவதற்கான திட்டம் தீட்டுவது போன்வற்றுக்கும் இச்சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர் அசுமான் பசலிர்லா, ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அசுமான் பசலிர்லா இது பற்றி தெரிவிக்கையில், மசோதா நமது தேவாலய கலாச்சாரத்தை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளதுடன் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள், பன்முக கலாச்சாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றை பாதுகாக்க ஒரு விரிவான மற்றும் மேம்பட்ட சட்டத்தை நிறுவும் எனவும்குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மசோதா பாராளுமன்றத்தில் 389 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதுடன், தற்போது மசோதா ஜனாதிபதி யோவேரி முசெவேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓரின சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளதுடன் இது வெறுக்கத்தக்க சட்டம் என்று தெரிவித்துள்ளனர்.
மனித உரிமை ஆர்வலரான சாரா கசண்டே, உகாண்டாவின் வரலாற்றில் இன்று ஒரு சோகமான நாள் என்றும் வெறுப்பை ஊக்குவிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளதுடன் தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க முயல்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை - அறிவித்தது முக்கிய நாடு SamugamMedia கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கையானது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியுட்டுள்ளன. உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வரும் சூழலில் அவர்களை சில நாடுகள் அங்கீகரித்து அதற்கான சட்டங்களை இயற்றியுள்ளதுடன், சில நாடுகளில் ஓரினச் சேர்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் குறித்த மசோதாவின் பிரகாரம் ஓரின சேர்க்கையாளர் என அடையாளப்படுத்தப்படுவது குற்றம் எனவும் அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான விதி மீறல்களில் ஈடுபடும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு குறித்த சட்டத்தின் மூலம் மரண தண்டனை விதிக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உகாண்டா உட்பட 30 ற்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒரே பாலின உறவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில், உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான புதிய நடவடிக்கையாக சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிப்பது, அதில் ஈடுபடுவதற்கான திட்டம் தீட்டுவது போன்வற்றுக்கும் இச்சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர் அசுமான் பசலிர்லா, ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். அசுமான் பசலிர்லா இது பற்றி தெரிவிக்கையில், மசோதா நமது தேவாலய கலாச்சாரத்தை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளதுடன் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள், பன்முக கலாச்சாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றை பாதுகாக்க ஒரு விரிவான மற்றும் மேம்பட்ட சட்டத்தை நிறுவும் எனவும்குறிப்பிட்டுள்ளார். குறித்த மசோதா பாராளுமன்றத்தில் 389 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதுடன், தற்போது மசோதா ஜனாதிபதி யோவேரி முசெவேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓரின சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளதுடன் இது வெறுக்கத்தக்க சட்டம் என்று தெரிவித்துள்ளனர். மனித உரிமை ஆர்வலரான சாரா கசண்டே, உகாண்டாவின் வரலாற்றில் இன்று ஒரு சோகமான நாள் என்றும் வெறுப்பை ஊக்குவிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளதுடன் தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க முயல்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.