• May 17 2024

இலங்கையில் விடுதலையான தமிழக மீனவர்கள் 17 பேரும் சென்னை திரும்பினர்! samugammedia

Tamil nila / Oct 13th 2023, 1:41 pm
image

Advertisement

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரும் நேற்று (12 ) சென்னை திரும்பியுள்ளனர்.

இராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டிணத்தில் இருந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த மூன்று விசைப்படகுகளையும் அதிலிருந்த 17 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கடந்த 13ஆம் திகதி கைது செய்திருந்தனர்.

குறித்த மீனவர்களின் வழக்கு கடந்த செப்டெம்பர்-27 ம் திகதி ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கை விசாரித்த நீதிபதி J.கஜநிதிபாலன் மீனவர்களை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18மாத சாதாரண சிறைத் தண்டணை என்ற நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 17 மீனவர்கள் நேற்று (12) விமானம் மூலம் கொழும்புவிலிருந்து புறப்பட்டு, சென்னை விமான நிலையம் சென்றடைந்தனர்.


இலங்கையில் விடுதலையான தமிழக மீனவர்கள் 17 பேரும் சென்னை திரும்பினர் samugammedia நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரும் நேற்று (12 ) சென்னை திரும்பியுள்ளனர்.இராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டிணத்தில் இருந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த மூன்று விசைப்படகுகளையும் அதிலிருந்த 17 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கடந்த 13ஆம் திகதி கைது செய்திருந்தனர்.குறித்த மீனவர்களின் வழக்கு கடந்த செப்டெம்பர்-27 ம் திகதி ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கை விசாரித்த நீதிபதி J.கஜநிதிபாலன் மீனவர்களை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18மாத சாதாரண சிறைத் தண்டணை என்ற நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.இந்நிலையில், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 17 மீனவர்கள் நேற்று (12) விமானம் மூலம் கொழும்புவிலிருந்து புறப்பட்டு, சென்னை விமான நிலையம் சென்றடைந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement