• Apr 25 2024

18 வயது முடிந்தவுடன் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த மாணவி - ஒப்பந்தம் போட்ட பெற்றோர்..! samugammedia

Chithra / May 25th 2023, 5:20 pm
image

Advertisement

18 வயது நிறைவடைந்து 19 வயதை எட்டிய பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சுற்றுவட்டார பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வரும் நிலையில், அங்கு  திருமணமாகத 32 வயதுடைய ஆங்கில ஆசிரியரான ராஜன் ஆண்டனி பணியாற்றி வந்துள்ளார். 

அவருக்கு அங்கு கற்கும் 18 வயது மாணவியுடன் கடந்த ஆண்டுகளாக காதல் இருந்து வந்துள்ளது. மாணவிக்கு 18 வயது பூர்த்தியாகாததாலும், பொதுத்தேர்வை கருத்தில் கொண்டும் தமது காதலை ரகசியமாக வைத்துள்ளனர். ஆனால் மாணவியின் தோழிகள் இதனை அறிந்திருந்தனர். 

இந்நிலையில்  சமீபத்தில் மாணவிக்கு 19 வயது வந்தமையால் அவரது பிறந்தநாளை ஆசிரியருடன் சக மாணவிகளும்  கொண்டாடிய நிலையில் அடுத்த நாள் அந்த மாணவி ஆசிரியருடன் ஓட்டம் பிடித்துள்ளார்.

தோழியை பார்த்து வருவதாக வீட்டில் கூறி சென்ற மாணவி,  வீடு திரும்பாமையால் அவரது தோழியிடம் விசாரித்த பொழுது இந்த காதல் விவகாரம் தெரிய வர அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் தமது மகளை ஆசிரியர் கடத்தியதாக பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். 

பொலிசார் நடவடிக்கை எடுத்ததன் பயனாக இருவரும் நேற்றைய தினம் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர். 

அங்கு வந்த பெற்றோர் மாணவியை தம்மிடம் வருமாறு வற்புறுத்திய பொழுதும் மாணவி செல்ல மறுத்துள்ளார். அத்துடன் இருவரும் இருவரும் மேஜர் என்பதால் இருவீட்டாரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 

அதில் மாணவின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு முதலில் படிக்க வைப்பதாகவும் அதன் பின்னர் ஆசிரியருக்கே திருமணம் செய்து வைப்பதாகவும் அது வரை மகள் தங்களுடன் இருக்க வேண்டும் என்றும்    

பெற்றோர் கேட்டு கொண்ட நிலையில் இரு தரப்பினரும் பொலிசாரிடம் கடிதம் எழுதி கொடுத்தனர்.

அதன் பின்னர் பொலிசார்  மாணவிக்கு  அறிவுரை கூறி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

18 வயது முடிந்தவுடன் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த மாணவி - ஒப்பந்தம் போட்ட பெற்றோர். samugammedia 18 வயது நிறைவடைந்து 19 வயதை எட்டிய பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சுற்றுவட்டார பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வரும் நிலையில், அங்கு  திருமணமாகத 32 வயதுடைய ஆங்கில ஆசிரியரான ராஜன் ஆண்டனி பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு அங்கு கற்கும் 18 வயது மாணவியுடன் கடந்த ஆண்டுகளாக காதல் இருந்து வந்துள்ளது. மாணவிக்கு 18 வயது பூர்த்தியாகாததாலும், பொதுத்தேர்வை கருத்தில் கொண்டும் தமது காதலை ரகசியமாக வைத்துள்ளனர். ஆனால் மாணவியின் தோழிகள் இதனை அறிந்திருந்தனர். இந்நிலையில்  சமீபத்தில் மாணவிக்கு 19 வயது வந்தமையால் அவரது பிறந்தநாளை ஆசிரியருடன் சக மாணவிகளும்  கொண்டாடிய நிலையில் அடுத்த நாள் அந்த மாணவி ஆசிரியருடன் ஓட்டம் பிடித்துள்ளார்.தோழியை பார்த்து வருவதாக வீட்டில் கூறி சென்ற மாணவி,  வீடு திரும்பாமையால் அவரது தோழியிடம் விசாரித்த பொழுது இந்த காதல் விவகாரம் தெரிய வர அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் தமது மகளை ஆசிரியர் கடத்தியதாக பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். பொலிசார் நடவடிக்கை எடுத்ததன் பயனாக இருவரும் நேற்றைய தினம் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர். அங்கு வந்த பெற்றோர் மாணவியை தம்மிடம் வருமாறு வற்புறுத்திய பொழுதும் மாணவி செல்ல மறுத்துள்ளார். அத்துடன் இருவரும் இருவரும் மேஜர் என்பதால் இருவீட்டாரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதில் மாணவின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு முதலில் படிக்க வைப்பதாகவும் அதன் பின்னர் ஆசிரியருக்கே திருமணம் செய்து வைப்பதாகவும் அது வரை மகள் தங்களுடன் இருக்க வேண்டும் என்றும்    பெற்றோர் கேட்டு கொண்ட நிலையில் இரு தரப்பினரும் பொலிசாரிடம் கடிதம் எழுதி கொடுத்தனர்.அதன் பின்னர் பொலிசார்  மாணவிக்கு  அறிவுரை கூறி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisement

Advertisement

Advertisement