இரண்டாவது திருமணம் செய்து 8 நாட்களில் புதுமண தம்பதிகள் தமது 3 பிள்ளைகளையும் கொலை செய்து விட்டு தாமும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கன்னூர் மாவட்டம் வச்சல் பகுதியை சேர்ந்த 38 வயதான ஸ்ரீஜா என்ற பெண் சமீபத்தில் ஷஜி என்ற 42 வயது நபரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
திருமணத்தின் பின்னர், ஸ்ரீஜா புது கணவருடனும் தனது மூன்று பிள்ளைகளான சுராஜ் (12), சுஜின் (10), சுரபி (8) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஷஜியின் வீட்டில் பலர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவைக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஷஜி, ஸ்ரீஜா மற்றும் அவர்களின் 3 பிள்ளைகள் என தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த ஐவரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
அதையடுத்து, இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் பின்னர் ஸ்ரீஜாவும் அவரது கணவரும் குடும்ப பிரச்சனை காரணமாக இந்த முடிவினை எடுத்து இருக்கலாம் என கூறியுள்ளனர்.
இருவரும் முதலில் மூன்று பிள்ளைகளையும் தூக்கிலிட்டு கொலை செய்திருக்கலாம் எனவும், அதன் பின்னர் அவர்களும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறிருக்கையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மரணித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறுமணம் முடித்த 8 நாட்களில் குடும்ப தகராறு - 3 பிள்ளைகளுடன் தம்பதி எடுத்த விபரீத முடிவு. samugammedia இரண்டாவது திருமணம் செய்து 8 நாட்களில் புதுமண தம்பதிகள் தமது 3 பிள்ளைகளையும் கொலை செய்து விட்டு தாமும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கன்னூர் மாவட்டம் வச்சல் பகுதியை சேர்ந்த 38 வயதான ஸ்ரீஜா என்ற பெண் சமீபத்தில் ஷஜி என்ற 42 வயது நபரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் பின்னர், ஸ்ரீஜா புது கணவருடனும் தனது மூன்று பிள்ளைகளான சுராஜ் (12), சுஜின் (10), சுரபி (8) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஷஜியின் வீட்டில் பலர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவைக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஷஜி, ஸ்ரீஜா மற்றும் அவர்களின் 3 பிள்ளைகள் என தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த ஐவரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அதையடுத்து, இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் பின்னர் ஸ்ரீஜாவும் அவரது கணவரும் குடும்ப பிரச்சனை காரணமாக இந்த முடிவினை எடுத்து இருக்கலாம் என கூறியுள்ளனர்.இருவரும் முதலில் மூன்று பிள்ளைகளையும் தூக்கிலிட்டு கொலை செய்திருக்கலாம் எனவும், அதன் பின்னர் அவர்களும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறிருக்கையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மரணித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.