ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 200 வது ஆண்டு நிறைவு விழா இன்றையதினம் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது.
முதலில் ஆறுமுகநாவலரின் நினைவு ஊர்வலம் கல்லூரியின் பிரதான வாயிலிருந்து ஆரம்பமாகியது. இந்நிலையில் ஆறுமுகநாவலரின் ஊர்வலத்தின் போது மக்கள் வீதி தோறும் பூரண கும்பம் வைத்து வழிபட்டனர்
அதேவேளை ஆறுமுகநாவலரின் ஊர்வலமானது கல்லூரியின் பிரதான மண்டபத்தை அடைந்ததுடன் அங்கே அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கனும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளர் ப.உமாமகேஸ்வரனும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கல்லூரியின் விரிவுரையாளர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரிய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
யாழ் தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆறுமுக நாவலரின் 200வது ஆண்டு நிறைவு விழா ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 200 வது ஆண்டு நிறைவு விழா இன்றையதினம் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது.முதலில் ஆறுமுகநாவலரின் நினைவு ஊர்வலம் கல்லூரியின் பிரதான வாயிலிருந்து ஆரம்பமாகியது. இந்நிலையில் ஆறுமுகநாவலரின் ஊர்வலத்தின் போது மக்கள் வீதி தோறும் பூரண கும்பம் வைத்து வழிபட்டனர்அதேவேளை ஆறுமுகநாவலரின் ஊர்வலமானது கல்லூரியின் பிரதான மண்டபத்தை அடைந்ததுடன் அங்கே அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கனும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளர் ப.உமாமகேஸ்வரனும் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில் கல்லூரியின் விரிவுரையாளர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரிய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.