வெலிப்பனை பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய யுவதி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், அவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெலிபன்ன பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிப்பன்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிஜ்ரா மாவத்தையில் வசிக்கும் சிறுமி இந்த முறைப்பாடு செய்துள்ளார்.
மொஹமட் அமீன் பாத்திமா அஸ்மியா என்ற யுவதியே காணாமல் போயுள்ளார்.
இந்த யுவதி கடந்த 27ஆம் திகதி இரவு முதல் காணாமல் போயுள்ளதாகவும், இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் பின்கதவு ஊடாக வெளியேறியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன யுவதியின் செருப்பு ஒன்றும் வீட்டின் அருகில் உள்ள வெலிபன்ன கால்வாய் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
24 வயதுடைய யுவதி மாயம்.கால்வாய் கரையில் மீட்கப்பட்ட பாதணியால் பரபரப்பு.samugammedia வெலிப்பனை பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய யுவதி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், அவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெலிபன்ன பொலிஸார் தெரிவித்தனர்.வெலிப்பன்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிஜ்ரா மாவத்தையில் வசிக்கும் சிறுமி இந்த முறைப்பாடு செய்துள்ளார்.மொஹமட் அமீன் பாத்திமா அஸ்மியா என்ற யுவதியே காணாமல் போயுள்ளார்.இந்த யுவதி கடந்த 27ஆம் திகதி இரவு முதல் காணாமல் போயுள்ளதாகவும், இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் பின்கதவு ஊடாக வெளியேறியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் போன யுவதியின் செருப்பு ஒன்றும் வீட்டின் அருகில் உள்ள வெலிபன்ன கால்வாய் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.