• Apr 27 2024

மசூதியில் குண்டு வெடிப்பு: 28 பேர் பலி; 150க்கும் மேற்பட்டோர் காயம்

Chithra / Jan 30th 2023, 4:06 pm
image

Advertisement

பாகிஸ்தான் - பெஷாவர் பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 28 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ள பெஷாவர் காவல்துறை ஆணையாளர் ரியாஸ் மெஹ்சூத்,   பள்ளிவாசலுக்குள் மீட்புப் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.


அத்துடன், இந்த வெடிப்பு சம்பவத்தில் 150க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் பள்ளிவாசல் சுவரின் பெரிய பகுதி உடைந்து விழுந்துள்ளது.


சம்பவத்தில் காயமடைந்த 150க்கும் மேற்பட்டோர் பெஷாவர் பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



மசூதியில் குண்டு வெடிப்பு: 28 பேர் பலி; 150க்கும் மேற்பட்டோர் காயம் பாகிஸ்தான் - பெஷாவர் பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 28 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ள பெஷாவர் காவல்துறை ஆணையாளர் ரியாஸ் மெஹ்சூத்,   பள்ளிவாசலுக்குள் மீட்புப் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.அத்துடன், இந்த வெடிப்பு சம்பவத்தில் 150க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வெடிப்பு சம்பவத்தில் பள்ளிவாசல் சுவரின் பெரிய பகுதி உடைந்து விழுந்துள்ளது.சம்பவத்தில் காயமடைந்த 150க்கும் மேற்பட்டோர் பெஷாவர் பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement