ஒட்டுமொத்த மலையக மக்களுக்காக நாடாளுமன்றத்தில் 3 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதனை அவதானிக்கும் போதே அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் பாகுபாடுகள் தெளிவாக தெரிவதாக குறிப்பிட்டுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இதனை குறிப்பிட்டிருந்தார்.
மலையக மக்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், அனைத்து மலையக மக்களுக்கு நிவாரணங்கள் வழங்ப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
விடே நிவாரணப்பட்டியலிலும் சமுர்த்தி பட்டியலிலும் மலையக மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக மலையக மக்களின் 200 வருட வாழ்கைக்கு பின்னர் அவர்களின் வரப்பிரசாதங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபா என கேட்டுவந்த ஜனாதிபதி தற்போது காணமல் போயுள்ளதாக வடிவேல் சுரேஸ் மேலும் தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டு 1000 ரூபா என நிர்ணயிக்கப்பட்ட போதும் 2023 இல் தோட்டக் கம்பனிகள் உயர்நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்
ஒட்டுமொத்த மலையகத்திற்கும் 3 நிமிடம் - பாரிய அநீதி. சபையில் குழம்பிய வடிவேல் சுரேஸ் samugammedia ஒட்டுமொத்த மலையக மக்களுக்காக நாடாளுமன்றத்தில் 3 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் குற்றம் சுமத்தியிருந்தார்.இதனை அவதானிக்கும் போதே அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் பாகுபாடுகள் தெளிவாக தெரிவதாக குறிப்பிட்டுள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இதனை குறிப்பிட்டிருந்தார்.மலையக மக்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், அனைத்து மலையக மக்களுக்கு நிவாரணங்கள் வழங்ப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.விடே நிவாரணப்பட்டியலிலும் சமுர்த்தி பட்டியலிலும் மலையக மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.குறிப்பாக மலையக மக்களின் 200 வருட வாழ்கைக்கு பின்னர் அவர்களின் வரப்பிரசாதங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டுள்ளார்.பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபா என கேட்டுவந்த ஜனாதிபதி தற்போது காணமல் போயுள்ளதாக வடிவேல் சுரேஸ் மேலும் தெரிவித்தார்.2020ஆம் ஆண்டு 1000 ரூபா என நிர்ணயிக்கப்பட்ட போதும் 2023 இல் தோட்டக் கம்பனிகள் உயர்நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்