• May 03 2024

மண்டூஷ் சூறாவளியால் சேதமடைந்த மீனவர்களின் 30 படகுகள்..!

Chithra / Dec 11th 2022, 3:19 pm
image

Advertisement

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் குருநகர் பகுதி மீனவர்களின் 30க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மண்டூஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகு இவ்வாறு அலையினால் அடித்து சேதமடைந்துள்ளது.

அத்துடன் ஒரு படகு முற்றாக கடலில் மூழ்கியுள்ளது. இதனால் மீனவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முப்பதுக்கு மேற்பட்ட மீனவர்களின் படகுகள் இவ்வாறு சேதமடைந்துள்ளதுடன் அவர்கள் கடற்றொழிலுக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் சேமடைந்த படகுகளை திருத்துவதற்கான பொருளாதார ரீதியாக தம்மிடம் வசதி இல்லை என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே அரசாங்கம் தங்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டுமென அவர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.


மண்டூஷ் சூறாவளியால் சேதமடைந்த மீனவர்களின் 30 படகுகள். சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் குருநகர் பகுதி மீனவர்களின் 30க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.மண்டூஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகு இவ்வாறு அலையினால் அடித்து சேதமடைந்துள்ளது.அத்துடன் ஒரு படகு முற்றாக கடலில் மூழ்கியுள்ளது. இதனால் மீனவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.முப்பதுக்கு மேற்பட்ட மீனவர்களின் படகுகள் இவ்வாறு சேதமடைந்துள்ளதுடன் அவர்கள் கடற்றொழிலுக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அத்துடன் சேமடைந்த படகுகளை திருத்துவதற்கான பொருளாதார ரீதியாக தம்மிடம் வசதி இல்லை என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.எனவே அரசாங்கம் தங்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டுமென அவர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement