• May 22 2024

உயர்தரப் பரீட்சை நிறைவடைந்து 54 நாட்கள்..!மதிப்பீட்டுப் பணிகள் தொடர்ந்து தாமதம்-பாதிக்கப்படும் மாணவர்கள்.!samugammedia

Sharmi / Apr 13th 2023, 1:59 pm
image

Advertisement

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்க முடியாத காரணத்தினால் முழுக் கல்விச் செயற்பாடுகளும் குழப்பநிலையில் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கவலை வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை நிறைவடைந்து கிட்டத்தட்ட 54 நாட்கள் கடந்துவிட்டதாகவும் ஏற்கனவே மதிப்பீட்டுப் பணிகள் மிகவும் தாமதமாகி வருவதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பணியைத் ஆரம்பிக்க பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பங்களிப்பு கிடைத்தால், ஏற்கனவே விண்ணப்பித்த மதிப்பீட்டு ஆய்வாளர்களைக் கொண்டு மதிப்பீட்டுப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்து, மேலும் தாமதிக்காமல் இந்த தேசியப் பணியை வெற்றியடையச் செய்வதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பரீட்சை திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உயர்தரப் பரீட்சை நிறைவடைந்து 54 நாட்கள்.மதிப்பீட்டுப் பணிகள் தொடர்ந்து தாமதம்-பாதிக்கப்படும் மாணவர்கள்.samugammedia உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்க முடியாத காரணத்தினால் முழுக் கல்விச் செயற்பாடுகளும் குழப்பநிலையில் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கவலை வெளியிட்டுள்ளது.இதன் காரணமாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உயர்தரப் பரீட்சை நிறைவடைந்து கிட்டத்தட்ட 54 நாட்கள் கடந்துவிட்டதாகவும் ஏற்கனவே மதிப்பீட்டுப் பணிகள் மிகவும் தாமதமாகி வருவதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இந்தப் பணியைத் ஆரம்பிக்க பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பங்களிப்பு கிடைத்தால், ஏற்கனவே விண்ணப்பித்த மதிப்பீட்டு ஆய்வாளர்களைக் கொண்டு மதிப்பீட்டுப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.இந்த நிலை தொடர்ந்து, மேலும் தாமதிக்காமல் இந்த தேசியப் பணியை வெற்றியடையச் செய்வதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பரீட்சை திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement