பத்தரமுல்லயில் அமைந்துள்ள கல்வியமைச்சிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டமைக்காக வசந்த முதலிகே உட்பட 56 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சு வளாகத்திற்குள் நுழைந்து பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக மாணவர் பிக்குகள் போராட்டம் முன்னெடுத்திருந்தனர்.
இலங்கையின் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை உடனடியாக திறக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.