• Apr 20 2024

மானிப்பாயில் பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் முக்கிய பொருளுடன் பெண் உள்ளிட்ட 9 பேர் கைது!samugammedia

Sharmi / Mar 28th 2023, 3:33 pm
image

Advertisement

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில்  ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட  9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் இருவரும் இன்று காலை இடம்பெற்ற சுற்றிவளைப்பில் 7 பேரும் மானிப்பாய் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சுதுமலை பகுதியை சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் 5 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயினுடனும் ஏனையோர் 2 கிராம் 950 மில்லிகிராம் ஹெரோயினாடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 8 கிராம் 750 மில்லிகிராம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்கள் சுதுமலை, சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மானிப்பாயில் பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் முக்கிய பொருளுடன் பெண் உள்ளிட்ட 9 பேர் கைதுsamugammedia மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில்  ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட  9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் இருவரும் இன்று காலை இடம்பெற்ற சுற்றிவளைப்பில் 7 பேரும் மானிப்பாய் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.சுதுமலை பகுதியை சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் 5 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயினுடனும் ஏனையோர் 2 கிராம் 950 மில்லிகிராம் ஹெரோயினாடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மொத்தமாக 8 கிராம் 750 மில்லிகிராம் கைப்பற்றப்பட்டுள்ளது.இவர்கள் சுதுமலை, சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.இவர்களை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement