• May 03 2024

விபத்தில் சிக்கி 22 வயது இளைஞன் மரணம்..! - பிழைப்புக்காக மன்னாருக்கு வந்த நிலையில் சோகம்

Chithra / Apr 8th 2024, 3:06 pm
image

Advertisement

மன்னார் -  தாழ்வுபாடு பிரதான வீதி ரெலிக்கோம் சந்திக்கு அருகாமையில்  இடம்பெற்ற விபத்தில் 22 வயதுடைய இளைஞன் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். 

நேற்று மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் குடும்ப வறுமை காரணமாக மன்னாரில் உணவகத்தில் பணியாற்றிவந்த  இளைஞனே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹட்டன் பகுதியை சேர்ந்த  22 வயதுடைய சந்திரகுமார் எனும் இளைஞனே விபத்தில் உயிரிழந்தவராவார்.

குறித்த இளைஞன் செலுத்திச் சென்ற சைக்கிள் மீது பின்னால் வந்த பட்டா ரக வாகனமொன்று மோதியதினாலேயே இவ் இவ்விபத்து சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டத்தில்  உணவகங்களில் தொழிலாளராக பணி புரிந்து வந்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்று சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே இளைஞன் உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

விபத்தில் சிக்கி 22 வயது இளைஞன் மரணம். - பிழைப்புக்காக மன்னாருக்கு வந்த நிலையில் சோகம் மன்னார் -  தாழ்வுபாடு பிரதான வீதி ரெலிக்கோம் சந்திக்கு அருகாமையில்  இடம்பெற்ற விபத்தில் 22 வயதுடைய இளைஞன் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் குடும்ப வறுமை காரணமாக மன்னாரில் உணவகத்தில் பணியாற்றிவந்த  இளைஞனே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.ஹட்டன் பகுதியை சேர்ந்த  22 வயதுடைய சந்திரகுமார் எனும் இளைஞனே விபத்தில் உயிரிழந்தவராவார்.குறித்த இளைஞன் செலுத்திச் சென்ற சைக்கிள் மீது பின்னால் வந்த பட்டா ரக வாகனமொன்று மோதியதினாலேயே இவ் இவ்விபத்து சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டத்தில்  உணவகங்களில் தொழிலாளராக பணி புரிந்து வந்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்து இடம்பெற்று சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே இளைஞன் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement