• May 02 2024

மீனவர் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த தமிழக முதலமைச்சரிடமிருந்து அமைச்சர் டக்ளஸிற்கு அழைப்பு...!

Sharmi / Apr 19th 2024, 4:05 pm
image

Advertisement

இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமிழக முதலமைச்சர், புதுச்சேரி முதலமைச்சர் ஆகியோர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவில் தேர்தல் இடம்பெறுகின்றது. அந்த தேர்தலிற்காக கச்சதீவு விவகாரம் பேசப்படுகின்றது. நாட்டுக்குள் உள் வருபவர்களை கண்காணிக்க  காண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

அதனை நாங்கள் வரவேற்கின்றோம். இதுவரை காலமும் இலங்கை கடற்படை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடற்படையினர் எடுத்த நடவடிக்கையை பல்வேறு விதமாக பேசினர்.

ஆனால், இந்தியாவே இவ்வாறு கண்காணிப்பில் ஈடுபட்டால் நிலைமை சிறந்ததாக அமையும். தமிழக முதலமைச்சர் மற்றும் புதுக்சேரி முதலமைச்சர் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு என்னை அழைத்துள்ளனர்.

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை கட்டுப்படுத்துவது தொடர்பில் உறுதியளிக்கும் பட்சத்திலேயே குறித்த சந்திப்பிற்கு செல்வேன் என கூறியுள்ளேன் எனவும் தெரிவித்தார்.


மீனவர் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த தமிழக முதலமைச்சரிடமிருந்து அமைச்சர் டக்ளஸிற்கு அழைப்பு. இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமிழக முதலமைச்சர், புதுச்சேரி முதலமைச்சர் ஆகியோர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்தியாவில் தேர்தல் இடம்பெறுகின்றது. அந்த தேர்தலிற்காக கச்சதீவு விவகாரம் பேசப்படுகின்றது. நாட்டுக்குள் உள் வருபவர்களை கண்காணிக்க  காண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.அதனை நாங்கள் வரவேற்கின்றோம். இதுவரை காலமும் இலங்கை கடற்படை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடற்படையினர் எடுத்த நடவடிக்கையை பல்வேறு விதமாக பேசினர்.ஆனால், இந்தியாவே இவ்வாறு கண்காணிப்பில் ஈடுபட்டால் நிலைமை சிறந்ததாக அமையும். தமிழக முதலமைச்சர் மற்றும் புதுக்சேரி முதலமைச்சர் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு என்னை அழைத்துள்ளனர்.அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை கட்டுப்படுத்துவது தொடர்பில் உறுதியளிக்கும் பட்சத்திலேயே குறித்த சந்திப்பிற்கு செல்வேன் என கூறியுள்ளேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement