கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள கிராமசேவையாளர் அலுவலக வளாகத்திலேயே சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய கணகரத்தினம் ரவிச்சந்திரன் என்ற மூன்று பிள்ளைகள் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
குறித்த நபரின் சடலத்திற்கு அருகில் உணவுப் பொதி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் சடலம் உடல்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
உணவு அருந்திய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர். தமிழர் பகுதியில் சோகம். கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் உள்ள கிராமசேவையாளர் அலுவலக வளாகத்திலேயே சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய கணகரத்தினம் ரவிச்சந்திரன் என்ற மூன்று பிள்ளைகள் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்குறித்த நபரின் சடலத்திற்கு அருகில் உணவுப் பொதி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.இறந்தவரின் சடலம் உடல்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.