இன்றைய உலகில் பெண்கள் நாளுக்கு நாள் பல்வேறு துறைகளிலும் சாதித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் இலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையின பெண்ணொருவர் கொழும்பு அதிவேக வீதியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகின்றமை தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது.
இவர் தனது கடின உழைப்பினால் சாதிக்கவேண்டும் என்ற நோக்கோடு பயணிக்கும் சிங்கப்பெண்ணாக காணப்படுகின்றார்.
இவருக்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.