• Sep 17 2024

கொக்குவிலில் இடம்பெற்ற கோர விபத்தில் நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..! samugammedia

Chithra / May 22nd 2023, 12:12 pm
image

Advertisement

மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள குப்பிளாமடு பிரதேசத்தில் மோட்டார்சைக்கிளொன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குப்பிளாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய லோகிதராஜா கோவிந்தராஜா என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று இரவு 8.30 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதன்போது, குப்பிளாமடு வீதியின் குறுக்கே உள்ள மழைநீர் வழிந்தோடும் பள்ளத்தில் இருந்து மேலே செல்லும் போது மோட்டார்சைக்கிள் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியுள்ளது.

சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் நேற்று இரவு வாகனம் ஒன்றுடன் மோட்டர்சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.


கொக்குவிலில் இடம்பெற்ற கோர விபத்தில் நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. samugammedia மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள குப்பிளாமடு பிரதேசத்தில் மோட்டார்சைக்கிளொன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குப்பிளாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய லோகிதராஜா கோவிந்தராஜா என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் நேற்று இரவு 8.30 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.இதன்போது, குப்பிளாமடு வீதியின் குறுக்கே உள்ள மழைநீர் வழிந்தோடும் பள்ளத்தில் இருந்து மேலே செல்லும் போது மோட்டார்சைக்கிள் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியுள்ளது.சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் நேற்று இரவு வாகனம் ஒன்றுடன் மோட்டர்சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement