தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட 2023ம் ஆண்டிற்கான தேசிய இளைஞர் விருது விழாப் போட்டியின் இளம் பாடகர் போட்டியில், யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ம.மதுவந்தி தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.