• May 14 2024

இலங்கையில் இப்படியும் ஒரு ஆசிரியரா...! மாணவர்களுக்காக செய்த செயல்..! வைரலாகும் புகைப்படங்கள்!samugammedia

Sharmi / Apr 1st 2023, 11:34 pm
image

Advertisement

மட்டக்களப்பிலுள்ள கிராமமொன்றின் பாடசாலை ஆசிரியரான ஜீவனேஸ்வரன் ஜீவன்,தமது வகுப்புக்கு ஒரு வாரமாகப் பாடசாலை வரத்தவறிய மாணவனின் வீடு தேடிச் சென்று, காரணம் கேட்ட போது, முடி வெட்ட வில்லை, அதனால் பாடசாலை வரவில்லை எனக் கூறியுள்ளார்.

முடி வெட்டுவதானால் 20 கி.மீ தொலைவில் இருக்கும் மட்டக்களப்பு கதிரவெளி கிராமத்திலுள்ள சலூனுக்கு போகவேண்டும், அதற்கு வசதியும் இல்லை எனக் பெற்றோர் கூறியுள்ளார்கள்.

பாடசாலை வருவதற்கு முடி ஒரு தடையா இருக்கக் கூடாது என்பதை உணர்ந்த ஆசிரியர் ஜீவனேஸ்வரன் ஜீவன் அவர்கள், தமது கடமைக்கு அப்பால், சிகை ஒப்பனையாளராக மாறி ஆற்றிய மனித நேயப்பணி சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

சிகை ஒப்பனையாளராக மாறிய குறித்த ஆசிரியர் மாணவர்களுக்கு ஒழுங்கான முறையில் முடியினை வெட்டியுள்ளார்.

குறித்த படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் குறித்த ஆசிரியருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இப்படியும் ஒரு ஆசிரியரா. மாணவர்களுக்காக செய்த செயல். வைரலாகும் புகைப்படங்கள்samugammedia மட்டக்களப்பிலுள்ள கிராமமொன்றின் பாடசாலை ஆசிரியரான ஜீவனேஸ்வரன் ஜீவன்,தமது வகுப்புக்கு ஒரு வாரமாகப் பாடசாலை வரத்தவறிய மாணவனின் வீடு தேடிச் சென்று, காரணம் கேட்ட போது, முடி வெட்ட வில்லை, அதனால் பாடசாலை வரவில்லை எனக் கூறியுள்ளார்.முடி வெட்டுவதானால் 20 கி.மீ தொலைவில் இருக்கும் மட்டக்களப்பு கதிரவெளி கிராமத்திலுள்ள சலூனுக்கு போகவேண்டும், அதற்கு வசதியும் இல்லை எனக் பெற்றோர் கூறியுள்ளார்கள்.பாடசாலை வருவதற்கு முடி ஒரு தடையா இருக்கக் கூடாது என்பதை உணர்ந்த ஆசிரியர் ஜீவனேஸ்வரன் ஜீவன் அவர்கள், தமது கடமைக்கு அப்பால், சிகை ஒப்பனையாளராக மாறி ஆற்றிய மனித நேயப்பணி சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.சிகை ஒப்பனையாளராக மாறிய குறித்த ஆசிரியர் மாணவர்களுக்கு ஒழுங்கான முறையில் முடியினை வெட்டியுள்ளார்.குறித்த படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் குறித்த ஆசிரியருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement