• Jun 02 2024

திருமணமான சில மாதங்களிலேயே மர்மமாக உயிரிழந்த இளம் பெண்! samugammedia

Tamil nila / May 12th 2023, 8:08 am
image

Advertisement

வீடொன்றில் தனியாக இருந்த 25 வயதுடைய யுவதி இன்று (11) மதியம் திடீரென உயிரிழந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இங்கிரிய போதினாகல யஹலவத்த பிரதேசத்தில் வசித்து வந்த தினுஷிகா தமயந்தி ஜயசிங்க என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவர் மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது சமையலறையில் மயங்கிய நிலையில் மனைவி இருப்பதை கண்டுள்ளார்.

பின்னர், அவர் இங்கிரிய பிராந்திய வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்ற போதிலும், பொலிஸாரின் விசாரணையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த யுவதி விழுந்த இடத்திற்கு அருகில் உள்ள அறையொன்றில் சுவரில் இருந்து மின்சார பிளக் ஒன்று பிரிக்கப்பட்டிருந்ததையும் பொலிஸார் அவதானித்துள்ளனர்.

அடை மழையின் போது மின்னல் தாக்கி யுவதி உயிரிழந்துள்ளாரா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யுவதியின் திடீர் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

திருமணமான சில மாதங்களிலேயே மர்மமாக உயிரிழந்த இளம் பெண் samugammedia வீடொன்றில் தனியாக இருந்த 25 வயதுடைய யுவதி இன்று (11) மதியம் திடீரென உயிரிழந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இங்கிரிய போதினாகல யஹலவத்த பிரதேசத்தில் வசித்து வந்த தினுஷிகா தமயந்தி ஜயசிங்க என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.உயிரிழந்த பெண்ணின் கணவர் மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது சமையலறையில் மயங்கிய நிலையில் மனைவி இருப்பதை கண்டுள்ளார்.பின்னர், அவர் இங்கிரிய பிராந்திய வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்ற போதிலும், பொலிஸாரின் விசாரணையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.உயிரிழந்த யுவதி விழுந்த இடத்திற்கு அருகில் உள்ள அறையொன்றில் சுவரில் இருந்து மின்சார பிளக் ஒன்று பிரிக்கப்பட்டிருந்ததையும் பொலிஸார் அவதானித்துள்ளனர்.அடை மழையின் போது மின்னல் தாக்கி யுவதி உயிரிழந்துள்ளாரா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.யுவதியின் திடீர் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement