• Sep 17 2024

சாரதியின் நித்திரைக் கலக்கத்தால் ஏற்பட்ட விபரீதம் - பாலத்திற்குள் விபத்துக்குள்ளான எரிபொருள் பவுசர்

Chithra / Jan 24th 2023, 11:26 am
image

Advertisement

புத்தளம்- கொழும்பு பிரதான வீதியின் பத்துளுஓயா பகுதியில் உள்ள பாலத்தினுள் எரிபொருள் பவுசர் ஒன்று இன்று அதிகாலை 3.30 மணியளவில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

சபுகஸ்கந்தையில் இருந்து பாலாவி சீமெந்து தொழிற்சாலையில் எரிபொருளை பறித்து விட்டு மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சமயம் பத்துளுஓயாப் பகுதியில் பவுசர் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கத்தினால் பாலத்தின் பாதுகாப்பு வேலியை உடைத்துக் கொண்டு பத்துளுஓயா நீர்த் தேக்கத்தினுள் விழ்ந்து சாரதி காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான எரிபொருள் பவுசரில் இருந்து சாரதியை பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பாலத்தினுள் விழுந்துள்ள எரிபொருள் பவுசர் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 60 மீற்றர் தூரம் வரை சென்று புகையிரத பாலத்தை அண்டிய பகுதியில் தொடர்ந்தும் காணப்படுகின்றது.

விபத்துக்குள்ளான பவுசரை மீட்கும் பணியையும் மேலதிக விசாரனையும் முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


சாரதியின் நித்திரைக் கலக்கத்தால் ஏற்பட்ட விபரீதம் - பாலத்திற்குள் விபத்துக்குள்ளான எரிபொருள் பவுசர் புத்தளம்- கொழும்பு பிரதான வீதியின் பத்துளுஓயா பகுதியில் உள்ள பாலத்தினுள் எரிபொருள் பவுசர் ஒன்று இன்று அதிகாலை 3.30 மணியளவில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.சபுகஸ்கந்தையில் இருந்து பாலாவி சீமெந்து தொழிற்சாலையில் எரிபொருளை பறித்து விட்டு மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சமயம் பத்துளுஓயாப் பகுதியில் பவுசர் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கத்தினால் பாலத்தின் பாதுகாப்பு வேலியை உடைத்துக் கொண்டு பத்துளுஓயா நீர்த் தேக்கத்தினுள் விழ்ந்து சாரதி காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்துக்குள்ளான எரிபொருள் பவுசரில் இருந்து சாரதியை பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.பாலத்தினுள் விழுந்துள்ள எரிபொருள் பவுசர் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 60 மீற்றர் தூரம் வரை சென்று புகையிரத பாலத்தை அண்டிய பகுதியில் தொடர்ந்தும் காணப்படுகின்றது.விபத்துக்குள்ளான பவுசரை மீட்கும் பணியையும் மேலதிக விசாரனையும் முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement