• May 02 2024

ஆதிபுருஷ் திரைப்பட சர்ச்சை...!இந்திய படங்களுக்கு அதிரடித் தடை...!samugammedia

Sharmi / Jun 19th 2023, 1:05 pm
image

Advertisement

ஆதிபுருஷ் படத்தின் வசன சர்ச்சையை தொடர்ந்து நேபாளத்தில் இந்திய படங்களுக்கு  அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த வெள்ளிக் கிழமை வெளியானது.

அதில் ராகவனாக பிரபாசும், ஜானகியாக கீர்த்தி சனோனும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், நேபாளத்தில் திரையிட திட்டமிடப்பட்டிருந்த ஆதிபுருஷ் படத்தின் வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக நேபாள நாட்டின் காத்மண்டு நகர மேயர் பலேந்திர ஷா சமூக ஊடகம் ஒன்றில், ஆதிபுருஷ் இந்திய படத்தில், ஒரு வசனம் வருகின்றது.அதில், ஜானகி இந்தியாவின் மகள் என கூறப்படுகின்றது. அது  ஆட்சேபனைக்குரியது.

அதனால்,அதனை சரி செய்வதற்கு நாம்   3 நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நேபாளத்தின் சுதந்திரம், சுயமரியாதையை தக்க வைத்து, தேச நலனை பாதுகாப்பது  ஒவ்வோர் அரசினதும்,  அரசு அமைப்பின், அரசு சாரா பிரிவு மற்றும் நேபாள குடிமகனின் முதல் கடமை என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால்,அனைத்து இந்திய படங்களுக்கும் தடை விதித்துள்ளதுடன்,  காத்மண்டு பெருநகர பொலிசாரை திரையரங்கம் முன் குவித்தும் காத்மண்டு நகர மேயர் பலேந்திர ஷா உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, பொகாரா நகர மேயரும் உத்தரவு ஒன்றை பிறப்பித்து, இன்று (19) காலை முதல் அனைத்து பாலிவுட் திரைப்படங்களும் திரையிட தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இரு பெருநகர மேயர்களின் உத்தரவுகளை தொடர்ந்து, திட்டமிடப்பட்ட நேரத்தில் திரையிடப்படவிருந்த இந்தி அல்லது பாலிவுட் திரைப்படங்கள் ரத்து செய்யப்பட்டன.

அவற்றுக்கு பதிலாக ஹாலிவுட் மற்றும் நேபாள படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆதிபுருஷ் திரைப்பட சர்ச்சை.இந்திய படங்களுக்கு அதிரடித் தடை.samugammedia ஆதிபுருஷ் படத்தின் வசன சர்ச்சையை தொடர்ந்து நேபாளத்தில் இந்திய படங்களுக்கு  அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த வெள்ளிக் கிழமை வெளியானது. அதில் ராகவனாக பிரபாசும், ஜானகியாக கீர்த்தி சனோனும் நடித்துள்ளனர். இந்நிலையில், நேபாளத்தில் திரையிட திட்டமிடப்பட்டிருந்த ஆதிபுருஷ் படத்தின் வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நேபாள நாட்டின் காத்மண்டு நகர மேயர் பலேந்திர ஷா சமூக ஊடகம் ஒன்றில், ஆதிபுருஷ் இந்திய படத்தில், ஒரு வசனம் வருகின்றது.அதில், ஜானகி இந்தியாவின் மகள் என கூறப்படுகின்றது. அது  ஆட்சேபனைக்குரியது. அதனால்,அதனை சரி செய்வதற்கு நாம்   3 நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், நேபாளத்தின் சுதந்திரம், சுயமரியாதையை தக்க வைத்து, தேச நலனை பாதுகாப்பது  ஒவ்வோர் அரசினதும்,  அரசு அமைப்பின், அரசு சாரா பிரிவு மற்றும் நேபாள குடிமகனின் முதல் கடமை என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனால்,அனைத்து இந்திய படங்களுக்கும் தடை விதித்துள்ளதுடன்,  காத்மண்டு பெருநகர பொலிசாரை திரையரங்கம் முன் குவித்தும் காத்மண்டு நகர மேயர் பலேந்திர ஷா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பொகாரா நகர மேயரும் உத்தரவு ஒன்றை பிறப்பித்து, இன்று (19) காலை முதல் அனைத்து பாலிவுட் திரைப்படங்களும் திரையிட தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.இரு பெருநகர மேயர்களின் உத்தரவுகளை தொடர்ந்து, திட்டமிடப்பட்ட நேரத்தில் திரையிடப்படவிருந்த இந்தி அல்லது பாலிவுட் திரைப்படங்கள் ரத்து செய்யப்பட்டன. அவற்றுக்கு பதிலாக ஹாலிவுட் மற்றும் நேபாள படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement