துரோகி என விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்கள் கருத்து தெரிவித்த போதும் இலங்கையின் அரசியலை துல்லியமாக கணித்து துணிந்து செயற்பட்டவர் ஆனந்த சங்கரி என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரியை பாராட்டும் டுவிட்டர் பதிவொன்றை அலிசப்ரி பதிவிட்டுள்ளார்.
ஆனந்த சங்கரி குறித்து வெளியாகியுள்ள கட்டுரையை பகிர்ந்துகொண்டுள்ள அமைச்சர், ஆனந்த சங்கரி குறித்த பதிவினையும் வெளியிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல் ரீதியில் தங்களுடன் உடன்பட மறுப்பவர்களையும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்வதில்லை.
விடுதலைப்புலிகளின் கட்டளைகளிற்கு அடிபணியாத அல்லது அதனை மீறத் துணிந்தவர்கள் இரக்கமற்ற முறையில் கையாளப்பட்டனர்.
விடுதலைபுலிகளை பல்வேறு காலகட்டங்களில் புண்படுத்திய பல தமிழ் அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
புலிகளும் அவர்களுடன் இணைந்து பயணித்தவர்களும் ஆனந்தசங்கரியை துரோகி என அவதூறாக கண்டித்திருந்தனர்.
ஆனால் இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை சரியாக புரிந்துகொண்டவர் ஆனந்த சங்கரி என்றும் அலிசப்ரி குறிப்பிட்டுள்ளார்;.
ஆனந்த சங்கரிக்கு புகழ்மாலை சூட்டிய அலிசப்ரி – துரோகி இல்லை என்கிறார். samugammedia துரோகி என விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்கள் கருத்து தெரிவித்த போதும் இலங்கையின் அரசியலை துல்லியமாக கணித்து துணிந்து செயற்பட்டவர் ஆனந்த சங்கரி என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரியை பாராட்டும் டுவிட்டர் பதிவொன்றை அலிசப்ரி பதிவிட்டுள்ளார்.ஆனந்த சங்கரி குறித்து வெளியாகியுள்ள கட்டுரையை பகிர்ந்துகொண்டுள்ள அமைச்சர், ஆனந்த சங்கரி குறித்த பதிவினையும் வெளியிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல் ரீதியில் தங்களுடன் உடன்பட மறுப்பவர்களையும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்வதில்லை.விடுதலைப்புலிகளின் கட்டளைகளிற்கு அடிபணியாத அல்லது அதனை மீறத் துணிந்தவர்கள் இரக்கமற்ற முறையில் கையாளப்பட்டனர்.விடுதலைபுலிகளை பல்வேறு காலகட்டங்களில் புண்படுத்திய பல தமிழ் அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.புலிகளும் அவர்களுடன் இணைந்து பயணித்தவர்களும் ஆனந்தசங்கரியை துரோகி என அவதூறாக கண்டித்திருந்தனர்.ஆனால் இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை சரியாக புரிந்துகொண்டவர் ஆனந்த சங்கரி என்றும் அலிசப்ரி குறிப்பிட்டுள்ளார்;.