நாட்டில் பரவிவருகின்ற கொவிட்-19 மற்றும் டெங்கு நோய்களை கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சர்கள் குழுவொன்றும் நிபுணர் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் குழுவிற்கு பிரதமர் தினேஷ் குணவர்தனவும், கல்விக் குழுவிற்கு கலாநிதி சீதா அரம்பேபொலவும் தலைமை தாங்குவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.