ஜனநாயமாக அகிம்சை வழியில் போராடிய மக்களை காவல்துறையினர் காயப்படுத்தி பாரிய அட்டூழியங்களை புரிந்துள்ளதாக சட்டத்தரணி தவராசா குற்றம் சுமத்தியுள்ளார்.
நாளைய தினம் வேலன் சுவாமிகளை மீண்டும் நீதிமன்றில் முன்நிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் வேலன் சுவாமி மற்றும் சட்டத்தரணி தவராசாவும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், யாழ் மாவட்ட மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்தனர்.
இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.
காவல்துறையின் செயல்கள் அனைத்தும் மனித உரிமை மீறலாக அமைந்துள்ளதாகவும் எனவே இதற்கு எதிராக அரசியலமைப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.