எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சீதாவக்க ஒடிசி ரயில் இயங்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ரயில் திணைக்களம் கொழும்பு கோட்டையில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ரயில் நிலையங்களுக்கு வார இறுதி விசேட ரயிலை இயக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.