• May 17 2024

வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

Chithra / Apr 4th 2024, 9:13 am
image

Advertisement

 

2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 74,499 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அவர்களில் 34,599 பேர் வேலைக்காக வெளிநாடு சென்ற பெண்கள் என்பதும், அந்தத் தொகை சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் வெளிநாடு சென்ற மொத்த எண்ணிக்கையில் 46 சதவீதமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வருடம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் வேலைக்காக வெளிநாடு சென்ற ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 39,900 எனவும் பெரும்பாலான இலங்கையர்கள் குவைத் மாநிலத்திற்கு வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புள்ளிவிபரங்களின்படி, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கையர்கள் தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் வேலை தேடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஒரு முக்கிய விடயமாகும்.

இதன்படி, 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் மாத்திரம் தென் கொரியாவில் 2,374 இலங்கையர்களும், இஸ்ரேலுக்கு 2,114 பேரும், ருமேனியாவில் 1,899 பேரும், ஜப்பானில் வேலைக்காக 1,947 பேரும் வெளியேறியுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு.  2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 74,499 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.அவர்களில் 34,599 பேர் வேலைக்காக வெளிநாடு சென்ற பெண்கள் என்பதும், அந்தத் தொகை சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் வெளிநாடு சென்ற மொத்த எண்ணிக்கையில் 46 சதவீதமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை இவ்வருடம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் வேலைக்காக வெளிநாடு சென்ற ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 39,900 எனவும் பெரும்பாலான இலங்கையர்கள் குவைத் மாநிலத்திற்கு வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புள்ளிவிபரங்களின்படி, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கையர்கள் தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் வேலை தேடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஒரு முக்கிய விடயமாகும்.இதன்படி, 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் மாத்திரம் தென் கொரியாவில் 2,374 இலங்கையர்களும், இஸ்ரேலுக்கு 2,114 பேரும், ருமேனியாவில் 1,899 பேரும், ஜப்பானில் வேலைக்காக 1,947 பேரும் வெளியேறியுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement