வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை சல்லியம்பதி சல்லி முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 09 ம் நாள் நேற்று இரவு (13) மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அம்பாள் திருவீதி வலம் வரும் காட்சி இடம்பெற்றதுடன் பல பக்தர்கள் காவடி எடுத்து தமது வேண்டுதல்களை மேற்கொண்டனர்.
குறித்த நிகழ்வுகள் பாரம்பரிய மரபு முறைப்படி இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.