• Jun 17 2024

தலைமுடிக்கு இரசாயனச் சாயம் பூசுபவரா நீங்கள்? வெளியான எச்சரிக்கை!

Tamil nila / May 26th 2024, 10:21 pm
image

Advertisement

தற்போதைய காலகட்டத்தில் இளம் வயதினருக்கும் நரைமுடி பிரச்சினை ஏற்படுகிறது.

இதன் காரணமாக இளவயதினரும் சரி வயது முதிர்ந்தோரும் சரி நரைமுடியை மறைக்க இரசாயனச் சாயம்  பூசிக் கொள்கின்றனர்.

செயற்கை இரசாயனச் சாயம் பூசும்போது, சில விடயங்களை நாம் மனதில்கொள்ள வேண்டும்.

முதலில் நீங்கள் பயன்படுத்தப்போகும் இரசாயனச் சாயத்தை உங்கள் காதோரம் அல்லது கை முடிகளில் சிறிதளவு பயன்படுத்திப் பாருங்கள். எரிச்சல், அரிப்பு, நமைச்சல் போன்றவை இல்லாவிட்டால் தலை முழுவதும் பூசுங்கள்.

இரசாயனச் சாயம் பூசும்போது உச்சந்தலை மற்றும் முடிகளில் மட்டும் படும் வகையில் பூச வேண்டும். முகம் அல்லது புருவத்தில் சாயம் தெறிக்கும்விதமாக பூச வேண்டாம். அவ்வாறு முகம், புருவங்களில் சாயம் பட்டால் புருவங்கள் நரைக்கத் தொடங்கும்.

உங்கள் உடலில் எங்கெல்லாம் இரசாயனச் சாயம் படக்கூடாது என நினைக்கிறீர்களோ அங்கெல்லாம் பெட்ரோலியம் ஜெல், அல்லது தேங்காய் எண்ணெயை தடவிக்கொண்டு அடிக்க வேண்டும்.

இரசாயனச் சாயம் பூசி அதிக நேரம் காய விடவேண்டாம். இது நாளடைவில் உச்சந்தலையில் எரிச்சலை ஏற்படுத்தும். ஆகக்கூடினால் அரை மணித்தியாலம் அல்லது 15 நிமிடங்களுக்கு மாத்திரம் தலையில் இரசாயனச் சாயத்தை வைத்திருங்கள்.

தலைமுடிக்கு இரசாயனச் சாயம் பூசுபவரா நீங்கள் வெளியான எச்சரிக்கை தற்போதைய காலகட்டத்தில் இளம் வயதினருக்கும் நரைமுடி பிரச்சினை ஏற்படுகிறது.இதன் காரணமாக இளவயதினரும் சரி வயது முதிர்ந்தோரும் சரி நரைமுடியை மறைக்க இரசாயனச் சாயம்  பூசிக் கொள்கின்றனர்.செயற்கை இரசாயனச் சாயம் பூசும்போது, சில விடயங்களை நாம் மனதில்கொள்ள வேண்டும்.முதலில் நீங்கள் பயன்படுத்தப்போகும் இரசாயனச் சாயத்தை உங்கள் காதோரம் அல்லது கை முடிகளில் சிறிதளவு பயன்படுத்திப் பாருங்கள். எரிச்சல், அரிப்பு, நமைச்சல் போன்றவை இல்லாவிட்டால் தலை முழுவதும் பூசுங்கள்.இரசாயனச் சாயம் பூசும்போது உச்சந்தலை மற்றும் முடிகளில் மட்டும் படும் வகையில் பூச வேண்டும். முகம் அல்லது புருவத்தில் சாயம் தெறிக்கும்விதமாக பூச வேண்டாம். அவ்வாறு முகம், புருவங்களில் சாயம் பட்டால் புருவங்கள் நரைக்கத் தொடங்கும்.உங்கள் உடலில் எங்கெல்லாம் இரசாயனச் சாயம் படக்கூடாது என நினைக்கிறீர்களோ அங்கெல்லாம் பெட்ரோலியம் ஜெல், அல்லது தேங்காய் எண்ணெயை தடவிக்கொண்டு அடிக்க வேண்டும்.இரசாயனச் சாயம் பூசி அதிக நேரம் காய விடவேண்டாம். இது நாளடைவில் உச்சந்தலையில் எரிச்சலை ஏற்படுத்தும். ஆகக்கூடினால் அரை மணித்தியாலம் அல்லது 15 நிமிடங்களுக்கு மாத்திரம் தலையில் இரசாயனச் சாயத்தை வைத்திருங்கள்.

Advertisement

Advertisement

Advertisement