தமிழ் சிங்கள சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு சிறுவர் இல்லங்களில் உள்ள சிறார்களுக்கு ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்(13) நாடுபூராகவும் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில், கிளிநொச்சி மாவட்டத்திலும் செஞ்சோலை மற்றும் அறிவுச்சோலை சிறுவர் இல்லங்களில் தங்கியுள்ள சிறார்களுக்கு இராணுவத்தினரால் அன்பளிப்பு பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.