செல்வந்தர் எலோன் மஸ்க், செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் மற்றும் தொழில்துறை நிர்வாகிகள் ஆகியோர் சக்தி வாய்ந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைச் சற்று நிறுத்தும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
OpenAI இன் புதிய GPT-4 தொழில்நுட்பத்தைவிட சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவுச் செயற்பாடுகளை வளர்க்கும் பணிகளை 6 மாதத்துக்கு நிறுத்தி வைக்குமாறும் அவர்கள் எழுத்து பூர்வமாகக் கேட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதற்கான பாதுகாப்புச் செயற்பாடுகளை உருவாக்கும் வரை, சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை வளர்ப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக காணப்பட்டுள்ளது.
மிக வலுவான செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு நன்மையையே வழங்கும் என்பது உறுதியாகத் கண்டறியப்படும் பட்சத்தில் அவற்றை வளர்ப்பது நன்று என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தகைய தொழில்நுட்பம் பொருளியல், அரசியல் ரீதியான தடங்கல்களை ஏற்படுத்தி, சமூகம், சமுதாயம் ஆகியவற்றுக்கு ஆபத்தை விளைவிக்கும் எனவும் கூறியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(AL) மனிதர்களுக்கு ஆபத்து-விடுக்கப்பட்ட கோரிக்கை samugammedia செல்வந்தர் எலோன் மஸ்க், செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் மற்றும் தொழில்துறை நிர்வாகிகள் ஆகியோர் சக்தி வாய்ந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைச் சற்று நிறுத்தும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். OpenAI இன் புதிய GPT-4 தொழில்நுட்பத்தைவிட சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவுச் செயற்பாடுகளை வளர்க்கும் பணிகளை 6 மாதத்துக்கு நிறுத்தி வைக்குமாறும் அவர்கள் எழுத்து பூர்வமாகக் கேட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதற்கான பாதுகாப்புச் செயற்பாடுகளை உருவாக்கும் வரை, சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை வளர்ப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக காணப்பட்டுள்ளது. மிக வலுவான செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு நன்மையையே வழங்கும் என்பது உறுதியாகத் கண்டறியப்படும் பட்சத்தில் அவற்றை வளர்ப்பது நன்று என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.அத்தகைய தொழில்நுட்பம் பொருளியல், அரசியல் ரீதியான தடங்கல்களை ஏற்படுத்தி, சமூகம், சமுதாயம் ஆகியவற்றுக்கு ஆபத்தை விளைவிக்கும் எனவும் கூறியுள்ளனர்.