• May 17 2024

யாழில் நள்ளிரவில் வீடொன்றின் மீது தாக்குதல் - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி! samugammedia

Chithra / Jul 19th 2023, 6:27 am
image

Advertisement

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடு ஒன்று மீது பெட்ரோல் குண்டு வீசி சேதமாகப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

முகத்தை துணியால் மறைத்தவாறு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் குறித்த வீட்டில் ஜன்னல் கதவு என்பவற்றை அடித்து உடைத்து பெட்ரோல் குண்டு வீசி வீட்டின் பல பொருட்களை எரித்து சேதமாக்கியுள்ளனர்.

இதன்போது வீட்டில் இருந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி அச்சுவேலி பிரதேச 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.


யாழில் நள்ளிரவில் வீடொன்றின் மீது தாக்குதல் - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி samugammedia யாழ்ப்பாணம் - அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடு ஒன்று மீது பெட்ரோல் குண்டு வீசி சேதமாகப்பட்டுள்ளது.இந்த தாக்குதல் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.முகத்தை துணியால் மறைத்தவாறு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் குறித்த வீட்டில் ஜன்னல் கதவு என்பவற்றை அடித்து உடைத்து பெட்ரோல் குண்டு வீசி வீட்டின் பல பொருட்களை எரித்து சேதமாக்கியுள்ளனர்.இதன்போது வீட்டில் இருந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement