• May 04 2024

இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்!

Chithra / Feb 4th 2023, 5:05 pm
image

Advertisement

இங்கிலாந்து நாட்டில் நீண்டகால ராணியாக பதவி வகித்தவர் என்ற பெருமை வகித்தவர் 2-ம் எலிசபெத். கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி தனது 94-வது வயதில் உடல்நல குறைவால் காலமானார்.

இந்நிலையில், 2021-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ராணியை கொல்வதற்காக அரசு இல்லத்திற்குள் ஒருவர் புகுந்துள்ளார். அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், இந்திய வம்சாவளியான ஜஸ்வந்த் சிங் சைல் என தெரிய வந்தது. சம்பவம் நடந்தபோது அவருக்கு வயது 19.

விசாரணையில், ராணியை கொலை செய்யும் நோக்கத்துடன் வந்தேன் என அவர் ஒப்பு கொண்டுள்ளார். இதற்காக அவர், தன்னுடன் வில் அம்பு வடிவிலான ஆயுதம் ஒன்றை ஏந்தி சென்றுள்ளார்.

அவர் எதற்காக ராணியை கொல்ல சென்றார் என்று விசாரிக்கப்பட்டது. அவருக்கு மனநல சிசிக்சையும் அளிப்பதற்காக பிராட்மூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவர் மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ இணைப்பு வழியே லண்டன் நகரின் ஓல்டு பெய்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதில், நடந்த குற்ற சம்பவங்களை சிங் ஒப்பு கொண்டுள்ளார். இந்த தாக்குதல் முயற்சி சம்பவத்திற்கு முன்பு, ஜஸ்வந்த் சிங் பலருக்கும் வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், இந்தியாவில் 1919-ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையில் கொல்லப்பட்ட அனைத்து இந்தியர்களுக்காகவும், பழி வாங்குவதற்காக சிங் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளார் என தெரிய வந்து உள்ளது. 1842-ம் ஆண்டு தேச துரோக சட்டத்தின் கீழ் சிங் மீது குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது.

இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம் இங்கிலாந்து நாட்டில் நீண்டகால ராணியாக பதவி வகித்தவர் என்ற பெருமை வகித்தவர் 2-ம் எலிசபெத். கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி தனது 94-வது வயதில் உடல்நல குறைவால் காலமானார்.இந்நிலையில், 2021-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ராணியை கொல்வதற்காக அரசு இல்லத்திற்குள் ஒருவர் புகுந்துள்ளார். அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், இந்திய வம்சாவளியான ஜஸ்வந்த் சிங் சைல் என தெரிய வந்தது. சம்பவம் நடந்தபோது அவருக்கு வயது 19.விசாரணையில், ராணியை கொலை செய்யும் நோக்கத்துடன் வந்தேன் என அவர் ஒப்பு கொண்டுள்ளார். இதற்காக அவர், தன்னுடன் வில் அம்பு வடிவிலான ஆயுதம் ஒன்றை ஏந்தி சென்றுள்ளார்.அவர் எதற்காக ராணியை கொல்ல சென்றார் என்று விசாரிக்கப்பட்டது. அவருக்கு மனநல சிசிக்சையும் அளிப்பதற்காக பிராட்மூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவர் மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ இணைப்பு வழியே லண்டன் நகரின் ஓல்டு பெய்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதில், நடந்த குற்ற சம்பவங்களை சிங் ஒப்பு கொண்டுள்ளார். இந்த தாக்குதல் முயற்சி சம்பவத்திற்கு முன்பு, ஜஸ்வந்த் சிங் பலருக்கும் வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளார்.அதில், இந்தியாவில் 1919-ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையில் கொல்லப்பட்ட அனைத்து இந்தியர்களுக்காகவும், பழி வாங்குவதற்காக சிங் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளார் என தெரிய வந்து உள்ளது. 1842-ம் ஆண்டு தேச துரோக சட்டத்தின் கீழ் சிங் மீது குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement