நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்றைய தினமும் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், வடக்கு, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேல், மற்றும் தென்மாகாணங்களின் பல இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், களு, நில்வளா, ஜின், அத்துகலு ஓயா உள்ளிட்ட கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் அதன் அருகில் வசிப்போர் வெள்ள அபாயம் தொடர்பில், மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.