முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் ஒழுங்கான வைத்தியர் இல்லாத காரணத்தாலும் மருந்துகள் இல்லாத காரணத்தாலும்.மூங்கிலாறு உடையார்கட்டு பிரதேச மக்கள் இன்றையதினம் காலை ஆர்பாட்டம் ஒன்று நடத்தினர்.
இவ் ஆர்பாட்டத்தின்போது மூங்கிலாறு வைத்தியசாலைக்கு ஒழுங்கான வைத்தியர் இல்லாத காரணத்தாலும் மமருந்துகள் இல்லாத காரணத்தாலும் இப்பிரதேசத்தில் உள்ள சிறிய பிள்ளைகள் தொடக்கம் முதியோர் வரை கிளினிக்குகளாக இருந்தாலும் சரி மருந்து எடுப்பதாக இருந்தாலும் சரி புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு வரவேண்டிய நிலையில் உள்ளதாக கருத்துத் தெரிவித்தனர்.