ஐ.சி.சி ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர்,வீராங்கனைகளுக்கு விருது வழங்கி வருகிறது.
இந்த நிலையில் நவம்பர் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை ஐ.சி.சி.சி அறிவித்துள்ளது.
அதன்படி நவம்பர் மாத சிறந்த வீரராக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
டி20 உலகக்கிண்ணத்தில் அதிரடி காட்டியதுடன் இங்கிலாந்து அணிக்கு 2வது முறையாக டி20 உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்தார் .அந்த தொடர் முழுவதும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அதே போன்று சிறந்த வீராங்கனைக்கான விருதை பாகிஸ்தான் அணியின் சித்ரா அமீன் வென்றுள்ளார்.