பாதுகாப்பான புலம்பெயர்தலை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்வு யாழில் இன்று(21) இடம்பெற்றது.
IOM புலம்பெயர்வுக்கான சர்வதேச நிறுவனத்தின் ஏற்பாட்டிலேயே குறித்த விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.
புலம்பெயர்தலில் எவ்வாறான ஏமாற்று நடவடிக்கைகள் நாட்டில் இடம்பெறுகிறது என்பது பற்றியும் பாதுகாப்பாக எப்படி வெளிநாடுகளுக்கு புலம்பெயரலாம் என்பது பற்றியும் விரிவான தகவல்கள் இதன்போது வழங்கப்பட்டுள்ளது.
இவ் விழிப்புணர்வு நிகழ்வில் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.