மாவீரர் வாரத்தின் தொடக்க நாள் நிகழ்வு இன்று செவ்வாய்க் கிழமை (21) மாலை 4.00 மணிக்கு வடமராட்சி பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.
மாலைசந்தி தோட்டப் பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூன்று மாவீரர்களின் தாயார் பொதுச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.
இந் நிகழ்வில் மாவீரர்களது பெற்றோர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.