• May 22 2024

ஜனாதிபதித் தேர்தலில் பசில் களமிறங்க வேண்டும்..! மொட்டு எம்.பி கோரிக்கை

Chithra / Apr 12th 2024, 9:14 am
image

Advertisement

 

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  கட்சியின் சார்பில் பசில் ராஜபக்ச  களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் பண்டார  கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பசில் ராஜபக்ச ஜனாதிபதியாக வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளன. 

அவர் இந்நாட்டில் வேலை செய்து காட்டியவர், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் பசிலைப் பற்றி கேளுங்கள். 

அவர் ஜனாதிபதிப் பதவிக்கு வருவதில் உள்ள தவறு என்ன?

வேலை செய்து காட்டிய தலைவருக்குப் பதவி வழங்கப்படுவதே மிக பொருத்தம். அதற்கான தகுதியான நபரே பசில் ராஜபக்ச.

அதேவேளை, நாமல் ராஜபக்ச  சிறந்த இளம் தலைவர். அவர் மொட்டுக் கட்சியை பலப்படுத்திவிடுவார் என்ற அச்சம் காரணமாகவே நாமலுக்கு எதிராகப் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் பசில் களமிறங்க வேண்டும். மொட்டு எம்.பி கோரிக்கை  ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  கட்சியின் சார்பில் பசில் ராஜபக்ச  களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் பண்டார  கோரிக்கை விடுத்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.பசில் ராஜபக்ச ஜனாதிபதியாக வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளன. அவர் இந்நாட்டில் வேலை செய்து காட்டியவர், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் பசிலைப் பற்றி கேளுங்கள். அவர் ஜனாதிபதிப் பதவிக்கு வருவதில் உள்ள தவறு என்னவேலை செய்து காட்டிய தலைவருக்குப் பதவி வழங்கப்படுவதே மிக பொருத்தம். அதற்கான தகுதியான நபரே பசில் ராஜபக்ச.அதேவேளை, நாமல் ராஜபக்ச  சிறந்த இளம் தலைவர். அவர் மொட்டுக் கட்சியை பலப்படுத்திவிடுவார் என்ற அச்சம் காரணமாகவே நாமலுக்கு எதிராகப் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement