நுவரெலியா நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுதியில் உள்ள அனைத்து அறைகளும் தற்போது முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நுவரெலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புத்தாண்டின் போது நீண்ட விடுமுறை கிடைத்துள்ள நிலையில், நாடாளுமன்ற செயற்பாடுகள் எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் தொடங்கவுள்ளது.