எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்படுவார் என ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்களை இலக்குவைத்து பசில் ராஜபக்ச அடுத்த வாரம் அமெரிக்காவிலிருந்து வரவுள்ளார் என ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினரான உதயங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலே முதலில் இடம்பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர்,
மார்ச் ஐந்தாம் திகதி இலங்கைக்கு வரும் பசில் ராஜபக்ச வாகனப் பேரணியாக அழைத்து வரப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.