• Apr 21 2025

திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததானமும் தொற்றா நோய் விழிப்புணர்வும்

Thansita / Apr 20th 2025, 8:47 pm
image

அகில இலங்கை சுதேச மருத்துவ எதிர்கால சேவை சங்கத்தின் தலைமையில்,  திருகோணமலையில் இரத்ததான முகாம் மற்றும் தொற்றா நோய்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வின் மூலம், சுதேச மருத்துவர்கள் தங்களுடைய சமூக பங்களிப்பை உறுதியாக வெளிப்படுத்தினர். இரத்ததானத்தில் பெரும்பான்மையினர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களுடைய ரத்தத்தை தானமாக வழங்கினர். இத்துடன், தொற்றா நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் பயனுள்ள விழிப்புணர்வு அமர்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது, ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில், சுதேச மருத்துவர்களுக்கு அரச நியமனம் வழங்கப்பட வேண்டிய அவசியம் குறித்து உரையாடப்பட்டது. நாட்டில் இறக்குமதியாகக் கொண்டு வரப்படும் வைத்திய முறைகளைவிட, சொந்தமான சுதேச மருத்துவ முறைகளை ஊக்குவிப்பதன் மூலம் நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான வாய்ப்பு உண்டு என சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நிகழ்வு, சுதேச மருத்துவத்தின் சமூக பங்களிப்பையும், நாட்டின் சுகாதார எதிர்காலத்தைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் பார்வையையும் அழுத்தமாக வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.


திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததானமும் தொற்றா நோய் விழிப்புணர்வும் அகில இலங்கை சுதேச மருத்துவ எதிர்கால சேவை சங்கத்தின் தலைமையில்,  திருகோணமலையில் இரத்ததான முகாம் மற்றும் தொற்றா நோய்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.இந்த நிகழ்வின் மூலம், சுதேச மருத்துவர்கள் தங்களுடைய சமூக பங்களிப்பை உறுதியாக வெளிப்படுத்தினர். இரத்ததானத்தில் பெரும்பான்மையினர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களுடைய ரத்தத்தை தானமாக வழங்கினர். இத்துடன், தொற்றா நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் பயனுள்ள விழிப்புணர்வு அமர்வும் இடம்பெற்றது.இந்நிகழ்வின் போது, ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில், சுதேச மருத்துவர்களுக்கு அரச நியமனம் வழங்கப்பட வேண்டிய அவசியம் குறித்து உரையாடப்பட்டது. நாட்டில் இறக்குமதியாகக் கொண்டு வரப்படும் வைத்திய முறைகளைவிட, சொந்தமான சுதேச மருத்துவ முறைகளை ஊக்குவிப்பதன் மூலம் நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான வாய்ப்பு உண்டு என சுட்டிக்காட்டப்பட்டது.இந்த நிகழ்வு, சுதேச மருத்துவத்தின் சமூக பங்களிப்பையும், நாட்டின் சுகாதார எதிர்காலத்தைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் பார்வையையும் அழுத்தமாக வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

Advertisement

Advertisement

Advertisement