• May 04 2024

மஸ்கெலியாவில் இரத்த தான நிகழ்வு! samugammedia

Chithra / Jul 15th 2023, 3:50 pm
image

Advertisement

ஜந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இயங்கும் கிராமோதய சபைகள் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணி முதல் 3.00 மணி வரை இரத்த தானம் நிகழ்வு மஸ்கெலியா பௌத்த விகாரை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

குறிப்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் மவுஸ்சாக்கலை இராணுவ முகாமில் உள்ள இராணுவ சிப்பாய்கள் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட ஜந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள இளைஞர்கள் இரத்த தானம் நிகழ்வில் கலந்து கொண்டு இரத்தம் தானம் செய்தனர்.

நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கிக்கு சேகரிக்கபட்ட இரத்தம் மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லபட்டது.

இந்த நிகழ்வில் பேராதனை ஆதார வைத்திய சாலையில் உள்ள சிரேஸ்ட்ட வைத்திய அதிகாரி நில்மிணி லொக்குஹே தலைமையிலான வைத்திய குழுவினர் கலந்து கொண்டு இரத்தம் சேகரித்தனர்.

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.


மஸ்கெலியாவில் இரத்த தான நிகழ்வு samugammedia ஜந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இயங்கும் கிராமோதய சபைகள் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணி முதல் 3.00 மணி வரை இரத்த தானம் நிகழ்வு மஸ்கெலியா பௌத்த விகாரை மண்டபத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.குறிப்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் மவுஸ்சாக்கலை இராணுவ முகாமில் உள்ள இராணுவ சிப்பாய்கள் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட ஜந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள இளைஞர்கள் இரத்த தானம் நிகழ்வில் கலந்து கொண்டு இரத்தம் தானம் செய்தனர்.நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கிக்கு சேகரிக்கபட்ட இரத்தம் மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லபட்டது.இந்த நிகழ்வில் பேராதனை ஆதார வைத்திய சாலையில் உள்ள சிரேஸ்ட்ட வைத்திய அதிகாரி நில்மிணி லொக்குஹே தலைமையிலான வைத்திய குழுவினர் கலந்து கொண்டு இரத்தம் சேகரித்தனர்.மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.

Advertisement

Advertisement

Advertisement